Showing posts with label love. Show all posts

பூக்கும் ரோஜா நீ

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ 
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்

அது உன்னைப் போலவே ஊமை

ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று   

காதலர் தினம்

பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்

முதன்முதலில் பார்ப்பது உன் முகமே

உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது  
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல் 
பார்பவளும்  நீயே ! 
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை 
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

மனிதர்கள் பல விதம்

மனிதர்கள் பல விதம் 
மனித குணம் பல விதம் 
மொழிகளும் பல விதம் 
காதல் ஒன்றே ஒரு விதம்

தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை

இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே

உள்ளமோ ஏங்குகிறது

வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது

அழகிய வடிவம் அழிகிறது 


உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 

இணையும் எம் இதயம்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன் 
சொல்ல முடியா  அன்பில். 
என் அன்புக்கு வானம் இல்லை 
உன் அன்புக்கு எல்லை இல்லை 
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்